சென்னை: தமிழக முதல்வர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் கலந்துரையாடல்!!!
11/25/2024
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.இதனை அடுத்து நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில்மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார். மேலும்,அங்கு மறுவாழ்வு சேவை பெற வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.இந்த நிகழ்வானது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
