சிவகங்கை மாவட்ட திமுக வழக்கறிஞரணி ஆலோசனைக்கூட்டம்!!!

sen reporter
0

மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் ஆதி. அழகர்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ம. ஜெயராமன், அண்ணாத்துரை, பொன்னுச்சாமிபங்கேற்பு. மாண்புமிகு அமைச்சர் மாவட்டக்கழக செயலாளர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் ஆலோசனையின் பேரில் 

வருகின்ற 18 ந்தேதி நடைபெறும் கழக மாநில மாவட்ட வழக்கறிஞரணி சார்பில் நடைபெறும் மாநாட்டிற்கான ஆலோசனைக்கூட்டம் சிவகங்கை கல்லூரி சாலையில் அமைந்துள்ள  கலைஞர் அறிவாலய வளாகத்தில் நடைபெற்றது..மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்ஞத்தில் நகர்க்கழக மேனாள் செயலாளரும் அரசு குற்றவியல் வழக்கறிஞருமான ஆதி. அழகர்சாமி முன்னிலை வகித்தார்.இதில் தலைமைக்கழக வழக்கறிஞர்களான சட்டமன்ற மேனாள் உறுப்பினர் கே. எஸ். ரவிச்சந்திரன், மாநில இணைச்செயலாளர் கலாநிதி, ஒன்றியக்கழக செயலாளர்கள் டாக்டர் ம. ஜெயராமன், வழக்கறிஞர் அண்ணாத்துரை , நகரம் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளைவழங்கினர். 

இந்த கூட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் சிவக்குமார்,பிரபாகரன், துஷாந்த் பிரதீப் குமார், பொன்முடி, பாண்டியன், துரைப்பாண்டி, அண்ணாமலை, அரசு மகிளா நீதிமன்ற வழக்கறிஞர் விஜயநிர்மலா கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் ஆனந்தி   உமாபதி சேதுராமச்சந்திரன் , பில்லுர் கார்த்திகேயன், வல்மீகிநாதன், கோதண்டராமன்,  தினேஷ்குமார், செந்தில் குமார்,நாகூர் கனி, உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் இறுதியில் வழக்கறிஞர் துரை வேலவன் நன்றி கூறினார்...

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top