சிறைச்சாலைகளுக்கு வெளியே இருந்து உணவு கொண்டு செல்லப்படுவதாக எழுந்த புகார்கள் தொடர்பான கேள்விக்கு, சில முக்கிய வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார்கள் வழக்கமாக வரும். ஆனால், இதில் 99 சதவீதம் உண்மை இல்லை என்பதே விசாரணைக்கு பிறகு தெரிய வரும். சிறைச்சாலைகளில் தற்போது தரமான உணவுகள் வழங்கப்படுகின்றன. அவர்களுடைய பாதுகாப்பிற்கு சிறைத்துறையே பொறுப்பாகும் என்பதால் இதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய கண்ணதாசன், மாநில மனித உரிமை ஆணையத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொது சேவையில் முழுமையான மன நிறைவை பெற முடியாது, தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதே பொதுச் சேவையில் நோக்கமாக இருக்கும்.மனித உரிமைகள் ஆணையத்தை பொறுத்தவரை பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. சம்பவம் நடைபெற்று ஓராண்டுக்குள் புகார்கள் தெரிவிக்கப்பட வேண்டும். இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது, சிவில் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய முடியாது. மேலும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இருந்து சாதிரீதியிலான பாதிப்பு புகார்களே அதிகம் வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சிவில் பிரச்சினைகள் தொடர்பான புகார்கள் வருகின்றன.சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் காவல்துறை செயல்பாடுகள் குறித்த புகார்கள், மோதல்கள் தொடர்பான புகார்கள் கோயம்புத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து வருகின்றன என்றார்.
