வேலூர்:நவம்பர்16-ல் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட மாநாடு!!!!

sen reporter
0

தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு அரசை கோருதல் உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி  தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி , கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் வேலூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வரும் 18ஆம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு. ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட மாநாடு 15.11.2025ல் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை வகித்தார்.  மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டுரெங்கன்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் ஜி.விநாயகம் வரவேற்று பேசினார்.  எ.சிவக்குமார், டி.மோகனவேலு, கே.பொன்னுசாமி, எஸ்.முருகேசன், ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம் வாழ்த்தி பேசினார்.பின்வரும் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்மாவட்ட தலைவராக முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், செயலாளராக ஜி.ஆறுமுகம் , மாவட்ட பொருளாளராக அ.சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர்களாக ஜி.விநாயகம், ஜி.ராஜேந்திரன், எஸ்.ஜெயலட்சுமி,  எம்.கோபாலகிருஷ்ணன், மாவட்ட இணைச்செயலாளராக இல.சீனிவாசன், எஸ்.சச்சுகுமாரி, எ.ஜெயதேவரெட்டி, கே.சேகர், செயற்குழு உறுப்பினர்களாக டி.மோகனவேலு, எஸ்.முருகேசன், வி.பாலச்சந்தர், எஸ்.மகாலிங்கம், எம்.பாண்டுரெங்கன், கோபால ராசேந்திரன், பெ.சுப்பிரமணி, எஸ்.சச்சிதானந்தம், எஸ்.ஜோன்பிரேமகுமாரி, ஆகியோர் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.  மேலும் வேலூர் வட்ட தலைவராக டி.எ.தனசேகர், செயலாளராக எஸ்.பாலசுப்பிரமணி, பொருளாளராக சு.சோமாஸ்கந்தன், காட்பாடி வட்ட தலைவராக எச்.ஆசீர்வாதம், செயலாளராக பி.ஜெகன்நாதன், பொருளாளராக பொன்னுசாமி, குடியாத்தம் வட்ட தலைவராக எம்.ஆர்.மணி, செயலாளராக எஸ்.டி.திருநாவுக்கரசு, பொருளாளராக எம்.கோபாலகிருஷ்ணன் கே.வி.குப்பம் வட்ட அமைப்பாளராக எம்.விஜயகுமார், அணைக்கட்டு வட்ட அமைப்பாளராக எஸ்.பாலவிநாயகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வறிக்கையினை மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்ரெங்கனிடம் மாவட்ட தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ஒப்படைத்தார்.பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .

1.70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்கள் அனைவருக்கும் 10 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததைபோல ஓய்வு பெற்ற அனைவருக்கும் 80 வயது தொடக்கத்திலேயே ஓய்வூதியத் தொகையினை இருபது சதவிகிதம் உயர்த்தி வழங்க கோரியும் 

2.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்

3.ஓய்வூதிய தொகுப்பு (கமுடேஷன்) தொகையினை  பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக குறைத்திடுக.

4.மூத்த குடிமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய ஆந்திர மாநில அரசு 40 சதவிகித சலுகையில் பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது போல் தமிழ்நாடு அரசும் மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கோரி  தீர்மானிக்கப்பட்டது.

5.காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களையவும் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறக் கூடிய வகையில் புதிய காப்பீட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் இத்திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட கோரியும் தீர்மானிக்கப்பட்டது.

6.காப்பீட்டு செலவினத்தொகை திரும்ப பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்திட கோருவது

7.ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

8.ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரில் நவம்பர் 18ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாலை 4.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.முடிவில் இணைச் செயலாளர் எஸ்.சச்சுகுமாரி  நன்றி கூறினார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top