வேலூர்:பேரணாம்பட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இர. அருள் எஸ். ஸ்டாலின் செல்வராஜ் பங்கேற்பு!!!
3/23/2026
0
பேரணாம்பட்டு நகர, ஒன்றிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா பேரணாம்பட்டு கே .கே.நகரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நகர மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் டி. சார்லஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர் சி. ராஜேந்திரன், பி. குணசேகரன், எஸ். விமல் ராஜ் ,சி.சிவக்குமார் டி .ஆர்.ரவி, சி. கிருஷ்ணமூர்த்தி, எம். பாஸ்கரன், பி .சண்முகம், எம். நாராயணன், சி. சங்கர் ,எம்.அசோகன், சி .ஷாபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புதிய தேர்தல் அலுவலகத்தை காஞ்சிபுரம் மண்டல மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் இர. அருள், வேலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் எஸ். ஸ்டாலின் செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நகர மன்ற துணைத் தலைவரும், நகர திமுக செயலாளருமான ஆலியார் ஜூபைர் அஹ்மத், வேலூர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் பேராசிரியர் .எம்.பிரபாத்குமார், எம். கே. வுரஹமத் இரண்டாவது, மூன்றாவது வார்டு திமுக நிர்வாகிகள் ஐ .வில்லியம் பீட்டர், ஆர் .பாபு, கே. ஸ்டாலின், ஐ .சின்னா என்கின்ற யாக்கோபு மற்றும் ஜாவித் அகமத் ,சி.பாரு, ஆசிரியர் டி .ஜேம்ஸ், எம் .சிவராஜ், கே. சார்லஸ் ,மாஸ்டர் சி. ராமு, அரங்கநாதன், பேரணாம்பட்டு வினோத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
