கோவை:தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது!!!
4/07/2026
0
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஜெயராஜ் என்பவர் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக கூறி தேர்தல் அதிகாரியிடம் கடுமையாக முறையிட்டு வருகிறார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர். நான் ஒரு பிற சமூகம் என்பதால் எனது வேட்பு மனுவை திட்டமிட்டு நிராகரித்துள்ளது என சிறுவாணி சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் அதனால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
